பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் செய்துங்கநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக கண்டன கோஷங்களை காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து சாலையின் நடுவே காங்கிரஸ் கட்சியின் வைத்தனர். இதனால் நெல்லை திருச்செந்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்த ஆர்ப்பாட்டத்தில் நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் தாசன், மாவட்ட பொதுச் செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயசீலன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிராஜேந்திரன் ,வெள்ளுர் அலங்கார பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் பாரத் நகர தலைவர் கருப்பசாமி, நகரச் செயலாளர் நிலமுடையான், ஆழ்வார்திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன் ஐ என் டி சி தலைவர் மரிய ஜெயக்கொடி, மகளிர் காங்கிரஸ் தலைவி மாரி பொன்சிகா, கருங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் புஙகன், பூல்பாண்டியன், நயினார், ஐயப்பன், அப்துல் ரவுப், மாரிச்செல்வம், ராமர், முத்துகிருஷ்ணன், பால் துறை, ஹரிதாஸ், பன்னீர்செல்வம், வெள்ளத்துரை, செல்லத்துரை, பழனி, அழகுமுத்து, கந்தன், பழனி பொன்பாண்டி ,சுந்தரபாண்டி, மாரியப்பன் ,குழந்தை, ஆழ்வார், ஆறுமுகம், ரோஹித், ஸ்டாலின், சிவசுப்பிரமணியன், தங்கவேல் இஸ்மாயில் செல்லப்பாண்டியன், மாசானமுத்து ,தியாகராஜன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


