
தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் முன்பு அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் பதனிர், தர்பூசணி பழவகைகளை பொது மக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் நகர் மன்ற தலைவர், விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின் முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.