தூத்துக்குடி மாநகராட்சி பெரிய காட்டன் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் மேல பெரிய காட்டன் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மாநகராட்சி டவுன் பிளானிங் செயற்பொறியாளர் முனீர் அகமது தலைமையில் உதவி அதிகாரிகள் அணு தேவி பிரியா மேற்பார்வையில் நடைபெற்றது. இதில், சாலை இரு ஓரங்களில் இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்து வருகிறது.


