பல்கேரியா அல்லது பல்காரியா என்னும் நாடு , முறைப்படி பல்கேரியக் குடியரசு ஐரோப்பாவின் தென் கிழக்கே அமைந்துள்ளது.
இன்றைய பல்கேரியா ஐந்து நாடுகளுடன் எல்லை கொண்டுள்ளது. வடக்கே டானூப் ஆற்றை ஒட்டி ருமேனியா, மேற்கே செர்பியாவும் மசிடோனியாவும், தெற்கே கிரீசும் துருக்கியும் கருங்கடலும்.
முற்காலத்தில் பல்கேரியாவில் திரேசியம் என்னும் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசிய திராசியர் வாழ்திருந்தனர். அதன் பின்னர் பழம் கிரேக்கர்களும், ரோமானியர்களும் இங்கு வாழ்ந்தனர். அதன் பின்னர் இடைக்காலத்தில் ஐரோப்பாவின் பலம்பொருந்திய பல்கேரியப் பேரரசு இங்கு நிறுவப்பட்டது. இதன் பயனாய் இலக்கியம் கலைப் பண்பாடுளின் தாக்கம் பால்க்கன் பகுதியின் பெரும்பான்மையான இடங்களிலும், கிழக்கு ஐரோப்பாவின் சிலாவிக் மக்கள் இடையேயும் பரவியது. இரண்டாவது பல்காரியப் பேரரசின் வீழ்ச்சியின் பிறகு, பல்காரியா 5 நூற்றாண்டுகளுக்கு ஒட்டோமான் பேரரசுக்குக் கீழ் இருந்தது. பின்னர் 1878ல் பல்காரியா மேண்டும் அரசியல்சட்ட முடியாட்சியுடன் மீண்டும் நிறுவப்பட்டது. இதுவே மூன்றாவது பல்காரியப் பேரரசின் துவக்கம் என்று கூறப்படுகின்றது. இன்று பல்காரியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள ஒரு மக்களாட்சிப்படி அரசியல் சட்டக் குடியரசாக ஆளப்படும் ஒருங்கிணைந்த நாடு. இது நேட்டோ கூட்டுப் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினரான நாடுகளில் ஒன்று.
பல்கேரியா என்ற பெயர் பல்கேரியர்களிடமிருந்து பெறப்பட்டது, இது துருக்கிய தோற்றத்தின் ஒரு பழங்குடி நாடாகும். 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே, அவர்களின் பெயர் முழுமையாக அறியப்படவில்லை, கடினமாகவும் இல்லை, ஆனால் அது ப்ரோடோ-துர்க்கிக் வார்த்தையான புஷ்கா மற்றும் அதன் வழித்தோன்றல் புல்காக் . அர்த்தம் மேலும் “கிளர்ச்சி”, “தூண்டுதல்” அல்லது “கோளாறு நிலையை உருவாக்குதல்” ஆகியவற்றிற்கு மேலும் நீட்டிக்கப்படலாம், அதாவது “தொந்தரவுகள்”. 4 ஆம் நூற்றாண்டின் போது பண்டைய சீனாவில் “ஐந்து பார்பாரியன்” குழுக்களின் ஒரு பகுதியாக இருந்த புளுலோஜி “கலப்பு இனம்” மற்றும் “சிக்கல்களை உருவாக்கியவர்கள்” என சித்தரிக்கப்பட்டது, .


