வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக நீரிழிவு நோய் தினம் நடந்தது.
மருத்து அலுவலர் ரத்னா தலைமை வகித்தார். சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். அனைவருக்கும் நிலவேம்பு காசயம் வழங்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் அறிகுறி சிகிச்சை குறித்து ஆலோசனை வழகப்பட்டது. வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை சுத்தப்படுத்தும பணியை மருத்துவ அலுவலர் ரத்னா, மற்றும் சித்த மருத்து அலுவலர் செல்வகுமார் துவக்கிவைத்தனர். டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பகுதி சுகாதர செவிலியர், சுகாதர ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவ மனை செவிலியர்கள் தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் மருத்துவ மனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வல்லநாடு சுகாதர ஆய்வாளர் ஜாஹுர் செய்திருந்தார்.