தூத்துக்குடியில் மாணவர்களின் வசதிக்காக இரவு நேரங்களில் அம்மா உணவங்களை திறக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தனியார் கோச்சிங் சென்டர்களில் அரசு தேர்வு மற்றும் வங்கி தேர்வுகளுக்காக தங்கியிருந்து படித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் நடத்திவரும் அம்மா உணவகத்தை இரவு நேரமும் செயல்படுத்த வேண்டி இந்து இளைஞர் முன்னணி சார்பில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இந்து முன்னணி நெல்லை கோட்ட ஒருங்கிணைப்பாளர் பிரம்மநாயகம், தூத்துக்குடி மாநகர ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம், தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாவட்ட பொது செயலாளர் நாரயணராஜ், மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மேற்கு மண்டல தலைவர் சுதாகர், மாணவர்கள் கலர் கலந்து கொண்டனர்.


