தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் போதை ஒழிப்பு இளைஞர் நலம் மற்றும் சேவைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் கலைக் கல்லூரி வாயிலில் இன்று மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் எச்.ஜ.வி/எய்ட்ஸ், போதை ஒழிப்பு இளைஞர் நலம் மற்றும் சேவைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆட்சியர் தலைமையில் கல்லூரி மாணவர்கள், சுகாதார அலுவலர்கள் உறுதிமொழிபினை எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


