சிறீவித்யா (24 சூலை 1953 – 19 அக்டோபர் 2006) ஒரு புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கர்நாடக இசைப் பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகளான இவர் 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை திரைப்படங்களில் நடித்து வந்தார். 2003ஆம் ஆண்டு முதுகெலும்பு புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் 2006, அக்டோபர் 19ஆம் தேதி அன்று இறந்தார். இவர் இந்திய திரைப்பட நடிகை, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் 40 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையில் 800 இக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில், இவர் மலையாளப் படங்களில் அதிக கவனம் செலுத்தினார்.
நடிப்புக்கு மேலதிகமாக, இவர் எப்போதாவது ஒரு பின்னணி பாடகியாகவும் பணியாற்றினார். மாறுபட்ட உணர்ச்சிகளை சித்தரிப்பதில் கட்டுப்பாடு மற்றும் நுணுக்கத்திற்காக இவர் மிகவும் பிரபலமானவர். இவர் தனது எல்லாத் திரைப்படங்களிலும் எல்லா மொழிகளிலும் ஒலிச்சேர்க்கை செய்ய தனது சொந்த குரலைப் பயன்படுத்தினார். சிறீவித்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை சோகங்கள் நிறைந்தது. 2006 ஆம் ஆண்டில், 53 வயதில் முதுகெலும்பு புற்றுநோயால் இறந்து போனார்.
சிறீவித்யா 1953 சூலை 24 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருட்டிணமூர்த்தி மற்றும் கருநாடக பாரம்பரிய பாடகர் எம். எல். வசந்தகுமாரி ஆகியோர் இவரது பெற்றோராவர். இவருக்கு சங்கரராமன் என்ற சகோதரர் இருந்தார்.
இவரது தந்தை தனது முகத் தசைகளை பாதித்த ஒரு நோய் காரணமாக இவர் பிறந்த ஆண்டில் நடிப்பதை நிறுத்த வேண்டியிருந்தது. இதனால் இவரது குடும்பம் நிதி நெருக்கடியில் விழுந்தது. குடும்பத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இவரது தாயார் நீண்ட நேரம் உழைத்தார். சிறீவித்யா ஒருமுறை தனது தாய்க்கு தாய்ப்பால் கொடுக்க கூட நேரம் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. சிறீவித்யா தனது மிகச் சிறிய வயதிலேயே நடிப்புலகில் அறிமுகமானார். இவரது பெற்றோரின் திருமணம் நிதி சிக்கல்களால் பிரச்சினைகளை எதிர்கொண்டபோது, சிறீவித்யாவின் இளமை மழுங்கடிக்கப்பட்டது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு விஞ்ஞானியிடமிருந்து இவர் திருமண முன்மொழிவைப் பெற்றார். ஆனால் இவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக திருமணம் நிறைவேறவில்லை.
புகழ்பெற்ற நடிகர் சிவாஜி கணேசனுடன் இணைந்து 1966ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான திருவருட்செல்வர் (1966) என்றத் திரைப்படத்தில் குழந்தை கலைஞராக சிறீவித்யா தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பி சுப்பிரமண்யன் இயக்கிய குமார சம்பவம் (1969) மற்றும் தாசரி நாராயண ராவ் இயக்கிய தெலுங்குத் திரைப்படமான டாடா மனவாடு (1972) ஆகியவற்றில் நடனக் காட்சியுடன் மலையாள படங்களில் நுழைந்தார். இருப்பினும், இவரது முதல் பெரிய பாத்திரம் கே. பாலச்சந்தர் இயக்கிய 1971ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான நூறுக்கு நூறுவில் ஒரு கல்லூரி மாணவி தனது பேராசிரியரை காதலிக்கும் கதாபாத்திரமாக இருந்தது. கதாநாயகியாக இவரது முதல் படம் டில்லி டு மெட்ராஸ் (1972), இதில் நடிகர் ஜெய்சங்கருக்கு இணையாக நடித்தார். 1970களின் நடுப்பகுதியில், இவர் தமிழ் திரையுலகில் அதிகப் படங்களில் நடிக்கும் ஒரு நடிகையாகிவிட்டார். கே.பாலசந்தர் இயக்கிய வெள்ளிவிழா, சொல்லத்தான் நினைக்கிறேன் மற்றும் அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் நடித்தார். அபூர்வ ராகங்களில் (1975) நடிகர் ரஜினிகாந்தின் முதல் கதாநாயகி ஆவார்.
இவர் 1969 இல் மலையாளத்தில் நடிக்கத் தொடங்கினார். இவரது முதல் படம் என். சங்கரன் நாயர் இயக்கிய சட்டம்பிக்காவாலா என்பதாகும். இதில் இவர் நடிகர் சத்யனுக்கு கதாநாயகியாக நடித்தார். ஏ. வின்சென்ட் இயக்கிய செண்டாவில் இவர் மக்கள் கவனத்தை ஈர்த்தார். இவர் நடித்த தென்னிந்திய மொழி திரைப்படங்களில், அதிகபட்ச திரைப்படங்கள் மலையாளத்தில் இருந்தன (1969 முதல் 2003 வரை)
புராணக் கதையான மகாபாரத்தை தழுவி 1976இல் வெளிவந்த ‘அம்பா அம்பிகா அம்பலிகா’ என்ற திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த அம்பா என்ற கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
சிறீவித்யா ஒரு பின்னணி பாடகியாகவும் இருந்தார். இவர் முதலில் தமிழ் படமான அமரன் என்ற படத்திலும் பின்னர் மலையாள படமான அயலத்தே சுந்தரிக்கும் பாடினார். பின்னர் இவர் ஒரு பெயின்கிளிக்கதா, நங்கலூடே கொச்சு டாக்டர், ரதிலயம் மற்றும் நட்சத்ரத்து போன்ற பல படங்களில் பாடினார்.
இவர் ஒரு பாரம்பரிய பாடகராகவும் இருந்தார். சூர்யா விழா போன்ற செயல்பாடுகளில் இவர் பாடுவார். இவர் கருநாடக இசையில் பெண் மும்மூர்த்திகளில் ஒருவராக இருந்த, இவரது தாயார் தா. கி. பட்டம்மாள் மற்றும் ம. ச. சுப்புலட்சுமி ஆகியோரிடம் பயிற்சி பெற்றிருந்தார்.


