நீராய்வியல் என்பது பெருங்கடல், கடல், கரையோரப் பகுதிகள், ஏரிகள் மற்றும் ஆறுகளின் அளவீடு மற்றும் இயற்பியல் சார் அம்சங்களைக் கையாளும் ஓர் செயல்முறை அறிவியல் துறை பிரிவு ஆகும். மேலும் இது போன்ற நீர்நிலைகளில் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்திற்காக அந்நீர்நிலைகளில் ஏற்படும் காலப்போக்கிலான மாற்றங்களைக் கணிப்பதும், பொருளாதார வளர்ச்சி, எல்லைப் பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இன்னபிற கடல்சார் செயல்களுக்குத் துணை செய்வதும் நீராய்வியலின் பயன்களும் நோக்கங்களும் ஆகும்.


