உலக மனிதநேய நாள் என்பது மனிதாபிமானப் பணியாளர்களையும், மனிதாபிமான காரணங்களுக்காக தங்களது உயிர்களை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு நாள் ஆகும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சுவீடனால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய இந்நாளை ஆண்டுதோறும் ஆகத்து 19 ஆம் நாள் கொண்டாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.[1] இந்நாளிலேயே ஐநா பொதுச் செயலரின் ஈராக்க்குக்கான சிறப்புத் தூதர் சேர்ச்சியோ வியெய்ரா டி மெல்லோ என்பவரும் அவரது 21 பணியாளர்களும் பகுதாது நகரில் குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர்.


