தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பால்பாண்டி. பனை தொழிலாளியான இவர் தற்போது பனை ஓலையில் பல்வேறு பொருட்களை செய்து அசத்தி வருகிறார். குறிப்பாக முன்னாள் முதல்வர்கள் காமராஜர், ஜெயலலிதா, கருணாநிதி உருவத்தையும், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் திருவுருவத்தையும் பனை ஓலையில் செய்து அசத்தியுள்ளார்.
இன்றைய தினம் இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இதற்காக பல்வேறு பகுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கருங்குளத்தைச் சேர்ந்த பனைத் தொழிலாளி பால்பாண்டி தனது வீட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முழு உருவத்தை பனை ஓலையால் செய்து அசத்தியுள்ளார். அவருக்கு கண்ணாடி அணிவித்தும் சட்டை மட்டும் பேண்ட் சர்ட் அணிந்து தத்ரூபமாக அவரது உருவத்தை வடிவமைத்துள்ளார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் அவரது உருவத்தை காண பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அவரது வீட்டிற்கு நேரில் வந்து மோடியின் உருவத்தை பார்த்து பால்பாண்டியை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.


