
திருச்செந்தூர் அருகே இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள செம்மறிகுளம் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் முப்பிடாதி என்கிற திவ்யா (22). இவர் கடந்த 12ம் தேதி மெஞ்ஞானபுரத்தில் உள்ள போஸ்ட் ஆபீசுக்கு செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.