
சேரகுளம் அருகே தெற்குகாரசேரியை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் தங்கபாண்டி(27). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ராமசுப்பிரமணியனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. தங்கபாண்டியின் உறவினர் பெண்ணை கேலி செய்தாக ராமசுப்பிரமணியனை, தங்பாண்டி எச்சரித்துள்ளார். இதற்கிடையில் தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவடா செய்வதிலும் இவர்கள் இருவருக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. எனவே அடிக்கடி இவர்கள் முறைத்துகொள்வது வழக்கமாக இருந்துள்ளது. இதற்கிடையில் நேற்று முன் தினம் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்பு இரவு 8.30 மணிஅளவில் கால்வாய் கிராமத்துக்கு தங்கபாண்டி சென்று விட்டு பைக்கில் தெற்குகாரசேரி திரும்பி கொண்டிருந்தார். அவர் வல்லகுளம் சாஸ்தா கோயில் விலக்கு அருகில் வரும் போது எதிர்பாரவிதமாக நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்து சராமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தங்கபாண்டி முகத்தில் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்துதகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாயஜோஸ் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், சேரகுளம் சப்இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தங்கபாண்டி உடலை கைபற்றி பாளை அரசு மருததுவமனைக்க அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேரகுளம் போலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்த போது தங்கபாண்டியை கொலை செய்தது ராமசுப்பிரமணியன், சுந்தரம், முருகன், உய்க்காட்டான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
இதற்கிடையில் தங்கபாண்டி உறவினர்கள் ராமசுப்பிரமணியன் உள்பட கொலையாளிகள் வீட்டையை தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே தெற்கு காரசேரியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பிரச்சனை ஏற்படாமல் இருக்க போலிஸ் குவிக்கப்பட்டுள்ளது. கொலையான தங்கபாண்டி மீது சேரகுளம் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் உள்ளது. இவர் தேடப்பட்டகுற்றவாளியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.