தூத்துக்குடி மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை, பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில்களின் கால அட்டவணை மற்றும் இயக்கப்படும் நாட்கள் குறித்த விவரம் வருமாறு:
தூத்துக்குடி – தாம்பரம் (வண்டி எண்: 06018)
தூத்துக்குடியில் இருந்து திங்கள் கிழமைகளில் புறப்படும் இந்த ரயில், ஜூன் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புறப்படும் நாட்கள்: மே 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 1, 8 (திங்கள் கிழமைகள்).
நேரம்: தூத்துக்குடியில் இருந்து இரவு 11:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும்.
தாம்பரம் – தூத்துக்குடி (வண்டி எண்: 06017)
தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் புறப்படும் இந்த ரயில், ஜூன் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புறப்படும் நாட்கள்: மே 5, 12, 19, 26 மற்றும் ஜூன் 2, 9 (செவ்வாய்க்கிழமைகள்).
நேரம்: தாம்பரத்தில் இருந்து மாலை 03:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 04:30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.
முக்கிய நிறுத்தங்கள்: இந்த சிறப்பு ரயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
பயணிகள் நலச் சங்கம் நன்றி: கோடைக்காலப் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, இந்தச் சிறப்பு ரயில்களைத் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.


