
ஆதிச்சநல்லூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் தலைவர் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில். இங்கு இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்தது. அதன் பின் 1902லிலும் 1903லிலும் அகழாய்வு நடந்தது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் மூலம் 2004ல் அகழாய்வு நடந்தது. ஆனால் இதன் அறிக்கை இதுவரை வெளிவரவில்லை. இதற்கிடையில் மாநில அரசு இந்த மாதம் ஆதிச்சநல்லூர், சிவகளை, தாமிரபரணி கரையில் உள்ள பல இடங்களில் அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணயம் தலைவர் டாக்டர் அருள்மொழி ஆதிச்சநல்லூரை பார்வையிட வந்தார். ஆதிச்சநல்லூர் குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கி கூறினார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், தூத்துக்குடி சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் ஆகியோர் உடன் வந்தனர்.
அவர் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள்தாழி உள்ள இடம், புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் கட்டிடம் உள்பட பல இடங்களை பார்வையிட்டார்.