
பெண்கள் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுகாண மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என நாட்டார்குளம் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் பேசினார்.
நாட்டார்குளம் சமுதாய நலக்கூடத்தில் விட்டிலாபுரம் பஞ்சாயத்துக்கான கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு துணை வடட்£ர வளரச்சி அலுவலர் சுல்தான் அலாவூதீன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் முத்து தீர்மானங்களை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட சடட பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் பேசியதாவது.
குறிப்பாக நீதிபதிகளை நீதிமன்றத்தில் சென்று அனுகுவது என்பது சாதரண காரியமல்ல. அவர்கள் பணி பொதுமக்களை நேரடியாக சந்திக்க முடியாமல் இருக்கும். ஆனால் மாவட்ட சட்ட பணிகள்ஆணைக்குழு சார்பாக நீதிபதிகள் உங்களை தேடி வந்திருக்கிறோம். மகளிருக்கு உதவ நாங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக சட்ட ஆலோசனை பெற, சட்ட அறிவு விளக்கம் பெற , சட்டப்பிரச்சனைகளில் சுமூகத் தீர்வு காண, மணவாழ்க்கை பிரச்சனைகளில் சுமூகத் தீர்வு காண , கைது செய்யப்பட்வர்கள் உதவி பெற, அவர்களை பிணையில் எடுக்க, நீதுமன்றங்களில் வழக்காட, அல்லது எதிர் வழக்காட, தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய, மோட்டார் வாகன விபத்துகளில் பாதிக்கபட்டோர் இழப்பீடு பெற, தொழிலாளர் தகராறுகளில் நிவாரணம் பெற, பெண் கொடுமைகளுக்கு எதிராக சட்ட உதவி பெற, ஜீவனாம்சம் பெற, அரசு அளித்துள்ள அனைத்து சலுகைகள் பெற, பெண்களுக்கு குடும்ப நீதி மன்றங்களில் வழக்கிட, எதிர் வழக்காட, அரசு ஆர்ஜிதம் செய்த நிலத்திற்கு இழப்பீடு பெற சட்ட உதவி அல்லது ஆலோசனை தேவைப்படும் மற்ற பிரச்சனைகள், வழக்குகளை நேரடியாக கோர்ட்டு முறையில்லாமல் மாற்று முறைகளில் தீர்வு காண்பது பற்றிய விளக்கங்கள் பெற நாங்கள் அனைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக ஸ்ரீவைகுண்டத்தில் இலவச சட்ட முகாம் உள்ளது. அந்த அலுவலகத்தினை நாடினால்,
உங்கள் பிரச்சனைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படும் என அவர் பேசினார்.
அப்போது வழக்கறிஞர் கண்ணன் விஸ்வநாத், அமிர்தவள்ளி, இசக்கியம்மாள், கற்பக சுந்தர், சாந்தி, ஒன்றிய அலுவலக உதவியாளர் கணேஷ் உள்பட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.