தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரச்சித்தி பெற்றது நவத்திருப்பதி கோவில்கள். இந்த திருப்பதிகளில் 7வது நவத்திருப்பதியான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் வருடம் தோறும் பங்குனித்திருவிழா சிறப்புடன் நடைபெறும்.
அதே போல் இந்த வருடமும் பங்குனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை மாலையில் பெருமாள் தோளுக்கினியன், சிம்மம், அனுமார், சேஷம், கருடன், அன்னம், யானை, குதிரை, இந்திர வாகனங்களில் திருவீதி உலா வருதல் நடைபெறுகிறது. அதன்பின் முக்கிய நிகழ்வான ஏப்ரல் 7ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அதன்பின் மறுநாள் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் விஷ்வநாத், செயல் அலுவலர் அஜித் மற்றும் விழாக்குழுவினர் பக்தர்கள் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.


