
சாத்தான்குளம் அருகே உள்ள கந்தசாமிபுரத்தினை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மனைவி சோமசுந்தரி(35). இவர் இன்று மாலை 4 மணியளவில் அவரின் சொந்த ஊருக்கு சாத்தான்குளம் பஜாரில் இருந்து சென்றார். தோப்புவளம் அருகே அவர் சென்ற போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் சோமசுந்தரி கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு சிட்டாய் பறந்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலிசில் சோமசுந்தரி புகார் செய்தார். மீண்டும் தலைதூக்கும் ஹெல்மெர் மர்மநபர்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.