
செய்துங்கநல்லூர் அருகே உள்ளது பாளை கிருஷ்ணாபுரம் காந்தவியல் வானிலை ஆராய்ச்சி மையம். இந்த மையத்தின் அலுவலக வாசலில் வேன் பைக் நேருக்குநேர் மோதியதில் பெண் பலியானார். பைக் ஓட்டி வந்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் சாம்பவர் வடகரையை சேர்ந்தவர் மதன் ( வயது 30). இவர் தனது உறவு கார பெண்ணான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த மேகலா (25). இவர்கள் இருவரும் நேற்று மாலை 6.30மணி அளவில் மோட்டார் பைக்கில் ஆழ்வார்திருநகரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் பாளை கிருஷ்ணாபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகில் வரும் போது எதிரே திருச்செந்தூரில் இருந்து அம்பாசமுத்திரம் வந்து கொண்டிருந்த பயணிகள் வேன் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. பின் அருகில் உள்ள ஆராய்ச்சி நிலைய அலுவலக வாசலில் உள்ள மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்தவிபத்தில் தூக்கி வீசப்பட்ட மேகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மிக மோசமான நிலையில் மதனை பாளை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அம்பாசமுத்திரம் அடப்பகார தெருவை சேர்ந்த சங்கரநாரயணன் மகன் முருகன் (45). தன்னுடைய தெருவில்இருந்து 13 பக்தர்களை திருச்செந்தூர் கூட்டி சென்று விட்டு ஊருக்கு திரும்பும் போது இந்த விபத்து நடந்தது. 13 பேர்களும் சிறுகாயத்துடன் தப்பினர்.
இது குறித்து தகவல் கிடைத்த வுடன் சிவந்திபட்டி இன்ஸ்பெக்டர் ராணி, சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் உள்பட போலிசார் வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். அதன் பின் மேகலா உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் முருகனை கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பகுதியில் கடந்த 1 மாதத்தில் சுமார் 3 விபத்து நடந்துள்ளது. எனவே இவ்விடத்தில் பயணிகள் கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.