
அயோத்தியில் இன்றைய தினம் ராமர் கோவில் கட்டுமானப்பணி துவங்க உள்ளது. அதற்காக அந்த பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்தக்கோரி செய்துங்கநல்லூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாபரி இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் அங்கு ஊடரங்கு பெயரால் நடக்கும் அத்துமீறல்களை நிறுத்த வேண்டுமு, முத்தலாக் தடைச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொருளாதார பேரழிவை கொரோனாவால் மறைப்பதை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி கிளைத்தலைவர் உமர் ஜமான் தலைமை வகித்தார். ஜமாத் தலைவர் முகம்மது அலி முன்னிலை வகித்தார். எஸ்டிபிஐ கிளைச் செயலாளர் நவாஸ், தொகுதி செயலாளர் அபூ உபைஸ், முத்துவாப்பா, ரியாஸ், ஹாலித், கேம்பஸ் பிரண்ட் அப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.