
மோடி மீண்டும் பிரதமராக வல்லநாட்டில் சிறப்பு யாகம் நடந்தது. இதில் எருமைக்கு தங்க கொலுசு மாட்டி சிறப்பு பூஜை நடந்தது.
வல்லநாட்டில் நாரயணன் என்பவர் நடத்தி வரும் கோசாலை ஒன்றுள்ளது. இந்த கோசாலையில் மோடி மீண்டும் பிரதமராக சிறப்பு யாகம் நடந்தது. யாருக்கும் தெரியாமல் நடந்த இந்த யாகத்தினை பத்திரிக்கையை சேர்ந்தவர் நடத்தியுள்ளார். சுமார் 21 பசுகள் நிறைந்த இந்த கோசாலையில் சுமார் 15 வேதவிற்பனர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 4 மணிநேரம் யாகம், வேத பாராயணம் நடந்தது. இதன் உச்சகட்டமாக எருமைக்கு தங்க கொலுசு மாட்டி, சிறப்பாக ஜோடிக்கப்பட்டு சிறப்பு பிராத்தனை நடந்தது. இந்த பிராத்தனையில் மோடி மீண்டும் பிரதமராக உத்தரவு கிடைத்துள்ளது என்று அவர் பிரதமர் ஆனவுடன் வல்லநாடு வந்து இந்த கோசாலையில் மேலும் சிறப்பான பூஜை ஒன்றை நடத்தவும் உத்தரவு ஆனதாக கூறப்படுகிறது. இங்கு நடந்த பூஜை அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அங்க வந்தவர்கள் செல் போனை தடை செய்யப்பட்டிருந்தது. இந்த யாகத்தில் கலந்துகொள்ள மோடி பிரதிநிதியாக வந்தவர் மட்டும் போனை பயன்படுத்தி கொண்டாராம்.
இதே போல் தேனீ தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கும் வெற்றி வேண்டி சிறப்பு பூஜையும், எருமை பூஜையும் நடத்துள்ளது. இரு நிகழ்ச்சிக்கும் வேத விற்பனர்களுக்கு சிறப்பாக வஸ்தர தானம், பணமுடிப்பு வழங்கப்பட்டது. இந்த கோசாலைக்கு சுப்பிரமணிய சுவாமி உள்பட பல வி.ஐ.பிகள் அடிக்கடி ரகசியமாக வந்து செல்வார்கள் என்பதும் குறிப்பிட தக்கது.
ஒரளவு கசிந்தது இந்த இரண்டு பேர் நிகழ்ச்சியும், இதை தவிர யார் யார் வந்து சேர்ந்தார்களோ, தேர்தலுக்கு பிறகு வெற்றியை பகிர வரும் போது தான்தெரியும் என்கிறார்கள், கோசாலை ஆதரவாளர்கள்.