சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவன வளாகத்தில், 80ஆவது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு நிறுவனத்தின் மூத்த உதவி தலைவர் ஜி. ஸ்ரீநிவாசன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் இரத்ததானம் செய்து வரும் நிறுவனத்தின் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், ஆலை பணியிடங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை சிறப்பாகக் கடைப்பிடித்து, அவசர காலங்களில் சிறப்பாகச் செயல்பட்ட பணியாளர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, 70 முறைக்கு மேல் இரத்ததானம் செய்து சமூகப் பணியில் சிறப்பாகப் பங்களித்து வரும் ஐஎன்டியூசி செயலாளர் பி.எஸ். முருகனுக்கு சிறப்புப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் நிறுவனத்தின் உதவி தலைவர்கள், மூத்த பொதுமேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் பாதுகாப்புத் துறையினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.


