விளாத்திகுளம், குளத்தூர் மற்றும் சூரங்குடி பகுதிகளில் நாளை (பிப்.5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விளாத்திகுளம் உபமின் நிலையத்தில் நாளை (பிப்.5) மாதாந்திர பணிகள் நடைபெற இருப்பதால் மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
இதுபோல் குளத்தூர் உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளுர் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
சூரங்குடி உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


