தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கட்டண தரிசனம் மாலை 6:30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொது தரிசனம் இரவு 7:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோயிலில் விசேஷ நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகைக்கு ஏற்பத் தரிசன நேரத்தில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் என்றும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


