மேல்மாந்தை ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன் சமுதாயக் கல்லூரியில் மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கல்லூரி இயக்குநர் கோடீஸ்வரன் வழிகாட்டுதலின்படி, கல்லூரி முதல்வர் ஆனந்த ரூபா தலைமையில், பேராசிரியைகளின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், கல்லூரி மாணவிகள் டாக்டர் அப்துல் கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரின் நினைவைப் போற்றும் வகையில் கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், அவரது உயரிய சிந்தனைகள், ஒழுக்கம், கல்வி சிந்தனை மற்றும் இலட்சியங்களைப் பின்பற்றிச் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் வாழ்வதற்கான உறுதிமொழியையும் மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.


