
தூத்துக்குடி தருவை மைதானத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சி தலைவர் சிறந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார்.
இதில் பொன்சொர்ணா ஸ்டுடியோ தயாரிப்பில் கடந்த பொதுத்தேர்தலின் போது 8 குறும்படத்தினை மாவட்ட நிர்வாகத்திற்காக எடுத்து கொடுத்தனர். அதில் பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியை வழி நடத்திய முன்னாள் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியரும் தற்போதைய திருச்செந்தூர் சமூக நலத்திட்ட தாசில்தாரான கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.