ஓணம் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரும் நிலையில், ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி மீனவர்கள் இன்றும் நாளையும் (ஆக.24 மற்றும் 25) தொழிலுக்குச் செல்லாமல் ஓய்வு எடுத்துள்ளனர். இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரை ஓரமாகப் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


