தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடற்கரை சாலையை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் பி.கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கடற்கரை பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் – திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான பி.கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


