
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராம் நகர், ரஹ்மத் நகர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும் அன்னை இந்திரா நகர் பகுதியில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, திமுக மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.