தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில் பாதுகாப்பு பணிக்கு 157 சிறப்பு காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணிக்கு மாத சம்பளம் ரூ.7 ஆயிரத்து 300 வழங்கப்படுகிறது. காலியாக உள்ள கோவில்களில் பணியில் சேர விருப்பம் உள்ள 62 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படை விலகல் சான்றுடன், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்” என தெரிவித்து உள்ளார்.


