செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் யூனியன் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கி சிறப்புரை யாற்றினார் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
வட்டார சமூகநலத்துறை அலுவலர் பாக்கியலட்சுமி, பீடிஓக்கள் செல்வி, பாக்கிய லீலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் கருங்குளம் வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 162 பயனாளிகள் அதில் நேற்று இரண்டாம் கட்டமாக 52 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ 50,000 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்தவர்களுக்கு ரூ 25,000 உதவி தொகையை ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா வழங்கினார்.
அப்போது எம்எல்ஏ சண்முகையா பேசுகையில் தமிழக முதல்வர் அவர்கள் கொரோனா காலகட்டத்தில் கூட மக்களுக்கு அந்தந்த நலத்திட்டங்கள் நேரடியாக சென்றடையவேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் எரும்பை போல் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்.
முழுக்க முழுக்க மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறார் ஆகவே தாலிக்கு தங்கம் போன்ற நிறைய எண்ணற்ற திட்டங்கள் இருக்கிறது, திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேந்திர பிரபு, கண்ணன், லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர்கள் மைமூன் அப்துல் கரீம், சுந்தரிகுமார், வசந்தி முருகேசன், முத்துராமலிங்கம், ராணிகந்தசாமி, கருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ் காந்தி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் நவநீதன், பஞ்சாயத்து தலைவர்கள் பார்வதிநாதன், கொம்பன், பேபிசங்கர், கருங்குளம் ஒன்றிய ஊராட்சி செயலாளர் சங்க தலைவர் சுரேஷ், ஹரிஹரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.