
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் 1954 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவ மாணவியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் 60 ஆண்டுகளை கடந்து இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத் தொகைகள் வழங்கினர்.