
நான் எழுதிய “தவழ்ந்து வரும் தாமிரபரணி” எனும் நூல் எனக்கு மிகவும் பிடித்த நூல். இந்த நூலை பற்றி புதுயுகம் தொலைக்காட்சியில் விமர்சனம் வெளிவந்துள்ளது. அதைதான் தற்போது உங்களிடம் பகிர்ந்துள்ளேன். புதுயுகம் தொலைக்காட்சிக்கு எனது நூலை அறிமுகம் படுத்திய திரு. சுண்டங்கோட்டை சிவராமன் அவர்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு. பரணிதரன் அவர்களுக்கும், மிக நேர்த்தியாக விமர்சனம் செய்த எழுத்தாளர் திரு. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், இந்த நிகழ்ச்சியில் பணியாற்றிய அனைத்து ஊடக தொழில் நுட்ப நண்பர்களுக்கும் நன்றி. தவழ்ந்து வரும் தாமிரபரணி நூல் பல்வேறு இடங்களில் எனக்கு நன் மதிப்பை வாங்கி தந்த நூல் பாண்டிச்சேரி அரசு தலைமை செயலாளர் திரு எஸ்.டி.சுந்தரேசன் ஐ.ஏ.எஸ் அவர்கள் அணிந்துரை தந்துள்ளார்கள். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ திரு. ஊர்வசி அமிர்த்ராஜ் அவர்கள் வாழ்த்துரை தந்துள்ளார்கள். தூத்துக்குடிக்கு வருகை தரும் முதல்வர், துணை முதல்வர், மந்திரிகள் உள்பட முக்கிய வி.ஐ.பிகள் வந்தால் இந்த நூலை தான் பரிசாக கொடுத்து வரவேற்கிறார்கள். இந்த நூலுக்காக கிட்டத்தட்ட 25 வருடம் தாமிரபரணி ஆற்றங்கரையில் பயணித்துள்ளேன். இந்த நூல் வேண்டுவோர் பொன்சொர்ணா பதிப்பகம் 8760970002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு நூல் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். நூலை பெறும் போது பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம். அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு