தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (மே 19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த 110/22KV சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (19-05-2026, செவ்வாய்க்கிழமை) அவசர மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தூத்துக்குடி நகர்ப்புற விநியோகச் செயற்பொறியாளர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணி நகர், 3-ஆவது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இ.பி. காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி,
எஃப்.சி.ஐ குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், என்.ஜி.ஓ. காலனி,
அன்னை தெரசா நகர், பர்மா காலனி, டி.எம்.பி. காலனி, அண்ணா நகர் 2-ஆவது மற்றும் 3-ஆவது தெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர், கல்லூரி நகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், எட்டையபுரம் ரோடு வடபகுதி, டி-மார்ட் வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


