தூத்துக்குடி பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில், புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மாணவ, மாணவிகள், பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டையில் எழுதி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினர். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வின்சென்ட் தலைமை வகித்தார்.
இதுபோல் தருவைகுளம் கத்தரினாள் மகளிர் பள்ளி, தூய மிக்கேல் தொடக்க பள்ளிகளில் மாணவ மாணவிகள் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டைகளை ஆட்சியருக்கு அனுப்பினர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் லாரன்ஸ், ரவி ஆகியோர் செய்திருந்தனர்.


