தூத்துக்குடியில் வாகனம் மோதி சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக குரூஸ்புரம் 5 வழிச்சாலையில் அமைக்கப்பட்டு இருந்த மின்விளக்கு கம்பத்தின் மீது நள்ளிரவில் வாகனம் மோதியதால் சாய்ந்த நிலையில் நிற்கிறது. இது பிரதான சாலையில் ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் உள்ளதால், விபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


