தூத்துக்குடி வடபாகம் காவல்துறை மற்றும் சித்தா கிளினிக் சார்பில் போதை விழிப்புணர்வு மற்றும் இலவச கண் மருத்துவ முகாம் வட்ட கோவில் அருகில் உள்ள சித்தா கிளினிக் வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு டாக்டர் மாரிமுத்து, உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ் தலைமை வகித்து கண் மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். முன்னதாக அனைவரும் போதைக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
டாக்டர் ஜீவ அனுசியா மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஏற்பாடுகளை மேலாளர் ராமராஜ், வணிக மேலாளர் கார்த்திகேயன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


