தூத்துக்குடி ஸ்பிக் நகரில் நாளை இலவசப் பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாமை ஸ்பிக் குழுமங்களின் தலைவர் அஸ்வின் முத்தையா தொடங்கி வைக்கிறார்.
தூத்துக்குடி ஸ்பிக்நகர் ரோட்டரி சங்கம், ஸ்பிக்நகர் அரிமா சங்கம், சென்னை ஏஎம் ஃபவுன்டேஷன், திருநெல்வேலி காவேரி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் இலவசப் பொது மருத்துவ முகாம் நாளை (ஜூலை 10, வெள்ளிக்கிழமை) ஸ்பிக் நகர் ஸ்பிக் மெடிக்கல் சென்டர் வளாகத்தில் காலை 11:30 மணி முதல் மதியம் 4:00 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
ஸ்பிக் குழுமங்களின் தலைவர் அஸ்வின் முத்தையா முகாமைத் தொடங்கி வைக்கிறார். இந்த முகாமில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு பரிசோதனைகள், இதயப் பரிசோதனைகளான ஈசிஜி (ECG), எக்கோ (ECHO), நுரையீரல் செயல்பாடு குறித்த பரிசோதனை, கண் சம்பந்தப்பட்ட நவீனப் பரிசோதனைகள், உடல் சார்ந்த அனைத்துப் பொதுவான நோய்களுக்கான சிறப்புப் பரிசோதனைகள் இலவசமாக அளிக்கப்படவுள்ளன.
இம்முகாமில், ஆண், பெண் இருபாலருக்கும் இலவச மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்துகளும் தேவையான ஆலோசனைகளும், இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்பிக்நகர் ரோட்டரி கிளப், அரிமா கிளப், ரோட்ராக்ட் கிளப், லியோ கிளப் ஆகிய அமைப்புகள் இணைந்து செய்துள்ளன.
தூத்துக்குடி ஸ்பிக் நகரில் நாளை இலவசப் பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாமை ஸ்பிக் குழுமங்களின் தலைவர் அஸ்வின் முத்தையா தொடங்கி வைக்கிறார்.


