தமிழ் எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் .
இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி என்னும் கிராமத்தில் 1946 – அக்டோபர் 14 ஆம் ஆண்டு நாள் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் ஏ.டி.சி. ஃபர்னந்தோ (A.D.C. Fernando) . பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பயின்றார். பொதுஆட்சியியலில் (Public Administration) முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்ட முதுவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்றுத்துறையில் “பேராசிரியர் இரத்தினசுவாமி – நாடாளுமன்றவாதி” என்னும் பொருளில் ஆய்வுசெய்து 1992இல் முனைவர் (D.Litt) பட்டமும் வணிகமேலாண்மையில் முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றார். காந்தியச் சிந்தனையிலும் இதழியலிலும் பட்டயம் பெற்றார்.
இவர் திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞராகவும், செயற்பாட்டாளராகவும், பணியாற்றினார். பின்னர், ஜனதா கட்சியில் இருந்தார். அங்கிருந்து விலகி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். பின்பு இ.தே.காங்கிரசில் இணைந்தார். 1996இல் ஜி. கே. மூப்பனாரால் நிறுவப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் உடன் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சிறிதுகாலம் இருந்தார். இறுதிக்காலத்தில் அரசியலிருந்து விலகி இருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 1974 ஏப்ரல் 3 ஆம் நாள் தொடங்கி 1974 அக்டோபர் 14ஆம் நாள் வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார். உரிய வயதினை அடைவதற்கு முன்னரே அப்பதவிக்குத் அவர் தேர்ந்தெடுக்ப்பாட்டார் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால் அப்பதவியை இழந்தார். மீண்டும் அ..இ.அ.தி.மு.க.சார்பில் 1984 ஏப்ரல் 3ஆம் நாள் முதல் 1990 ஏப்ரல் 2ஆம் நாள் வரை அந்த அவையில் உறுப்பினராகப் பதவிவகித்தார்.
1983 ஆம் ஆண்டில் சட்டமன்ற மேலவையின் உறுப்பினரானார். 1984ஆம் ஆண்டில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இப்பதவியிலிருந்து விலகினார்.
இவர் மேரிபானு என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு பெண்மக்களும் ஒரு மகனும் பிறந்தனர்.
மறைந்த முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரனால் தொடங்கப்பட்ட தமிழ் இதழான “தாய்”, “பாப்பாமலர்” ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார். “ராஜரிஷி” என்னும் இதழை நிறுவி அதன் ஆசிரியராக சிறிதுகாலம் இருந்தார்.
இலக்கியம், அரசியல் மற்றும் சித்த மருத்துவம் உட்பட பல துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.
அந்தக இரவில் சந்தன மின்னல்
இந்த நாள் இனிய நாள் (தொலைக்காட்சித் தொடர் உரை)
உள்ளதைச் சொல்லுகிறேன்
ஒரு ஊரின் கதை,
ஒரு நதி குளிக்கப்போகிறது (கவிதை)
காதல் கடிதங்கள்,
காதலும் காமமும் (இரண்டு பாகங்கள்)
கேரள நிசப்தம்
சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக
சொர்க்கத்தில் ஒருநாள்
நான் கழுதையானபொழுது
நான் விமர்சிக்கிறேன், ]
நீர்க்காகங்கள்,
பற்றி எரிகிற பனிநதிகள்
பாரதி ஒரு பார்வை (திறனாய்வு)
பிரார்த்தனைப் பூக்கள்
பைபிள் கதைகள் (1997ஆம் ஆண்டில் கல்கியில் வெளிவந்த தொடர்)
வரலாற்றில் கலைஞர்
வணக்கம், நக்கீரன் பதிப்பகம், சென்னை.
வாழ்க்கையை மாற்றும் வண்ணக்கற்கள்
ஜெயலலிதா
இவர் 1988ஆம் ஆண்டில் அது அந்தக் காலம் என்னும் திரைப்படத்தை இயக்கினார்.
இவர் 2005 மே 8ஆம் நாள் சிறுநீரக் கோளாறால் தொடர் சிகிச்சைபெற்று மரணமடைந்தார்.


