
எல். ஆர். ஈஸ்வரி (பிறப்பு: திசம்பர் 7, 1939) தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி. 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார்.
பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகிய பெற்றோருக்கு சென்னையில் பிறந்தார் லூர்து மேரி ஈசுவரி. இவரது தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் “லூர்துமேரி ராஜேஸ்வரி”. எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு.
மனோகரா (1954) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் “இன்ப நாளிலே இதயம் பாடுதே” என்ற பாடலை ஜிக்கி குழுவினர் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார். அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார். முதன் முதலில் தனியாகப் பாடும் சந்தர்ப்பம் நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) திரைப்படத்துக்காக கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே அவரே தான் இவரே என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதல் பாடலாகும். {பொண்ணு மாப்ப்பபிளே ஒன்த்தினாபோகுது ஜிகு ஜிகு வண்டியிலே}?குறிப்பு:திரைஞானம்? ஈஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.
இதனையடுத்து 1959 இல் வெளிவந்த நாலு வேலி நிலம் படத்துக்காக திருச்சி லோகநாதனுடன் இணைந்து ஊரார் உறங்கையிலே என்ற பாடலைப் பாடினார். இதனையும் கே.வி.மகாதேவனே இசையமைத்திருந்தார். 1961 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய வாராயென் தோழி என்ற பாடல் இவருக்கு மிகவும் புகழைத் தேடித்தந்த பாடல். இது இன்றும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும். “எலந்தைப் பழம்”, முத்துக்குளிக்க வாரியளா போன்ற பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்த ஏனைய பாடல்கள்.
பிற்காலத்தில் இவர் துள்ளிசைப் பாடல்களையே நிறையப் பாடினார். எழுபதுகளின் பிற்பகுதியில் ஈஸ்வரிக்கு திரைப்பட வாய்ப்புக் குறைந்தது. இருந்தாலும் பக்திப் பாடல்களை திரைப்படங்களிலும், வெளியிலும் அதிகம் பாடி வந்தார்.கவர்ச்சி குரல் குயிலாக அன்று முதல் இன்று வரை தனது திரை உலக வாழ்க்கையை தொடர்கிறார்.தொடர்ந்து கொண்டே இருப்பார்.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சிலம்பரசன் நடித்த 2011 திரைப்படமான ஒஸ்தி திரைப்படத்தில் “கலசலா கலசலா” என்ற தமிழ் குத்துப்பாடல் மூலம் மீண்டும் நுழைந்தார் . இந்த பாடல் வெளியான சில நாட்களில், இது ஒரு மிகப்பெரிய வெற்றி ஆனது மற்றும் மியூசிக் பாக்ஸ் ஆபிஸின் சிறந்த மதிப்பீடுகளை எட்டியது. அடுத்த ஆண்டு தடையறத் தாக்க திரைப்படத்தில் அவர் “நான் பூந்தமல்லி” என்ற பாடலைப் பாடினார். அவர் சமீபத்தில் விக்டரி திரைப்படத்திற்காக கன்னட பாடலையும் பாடியுள்ளார் , கைலாஷ் கெருடன் “யக்கா நின் மாகலு நானகே” என்ற பெயரில் சூப்பர் ஹிட்டானார் . 2013 ஆம் ஆண்டில், ஆர்யா சூர்யா திரைப்படத்தில் டி. ராஜேந்தருடன் சேர்ந்து “தகடு தகடு” என்ற டூயட் பாடலைப் பாடினார். 2014 இல் அவர் அதிதி திரைப்படத்தில் பரத்வாஜ் இசையில் “ஜெய்ப்பூரில் ஜெய்ப்பூரில்” பாடலைப் பாடினார் . 2020 ஆம் ஆண்டில், நயன்தாரா நடித்த திரைப்படமான “மூக்குத்தி அம்மன்” ஆடி குத்து என்ற பாடலைப் பாடியிருந்தார் .