
கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறப்பு: பிப்ரவரி 5, 1985 போர்த்துகீச கால்பந்து அணியின் தலைவராக 2010 உலக கால் பந்தாட்ட விளையாட்டுக்கு களம் இறங்கி உள்ளார். இவர் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் ஆடினார். தற்போது இத்தாலிய கால்பந்து அணியான யுவெண்டஸ் அணிக்கு ஆடி வருகிறார்.இப்பொழுது விளையாடிவரும் கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் இவராவார். இவர் மான்செஸ்ரர் யுனைரட் கழகத்திலிருந்து ரியல் மட்றிட்காக மாறிவந்த பொழுது இவருக்காக ஏலம் விட்ட தொகை சுமார் 132 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அது மட்டுமன்றி இவர் ரியல் மட்றிட்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 6 வருடங்களுக்கும் ஒவ்வொரு வருடத்திற்கும் தலா 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.தனது ஆரம்ப காலங்களில் அன்டோரின்கா என்ற கழகத்திற்காக விளையாடிய ரொனால்டோ 1997ல் நிசியோனல் என்ற கழகத்திற்கு மாறினார். அதன் பின் ஸ்போர்ரின் சிபி என்ற கழகத்தில் விளையாடும் பொழுது மன்செஸ்ரர் அணியின் நிர்வாகியான அலெகடஸ் பெர்கஸன் என்பவரால் இனங்காணப்பட்டு 18 வயதே நிரம்பிய இவரை 12.24 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு மன்செஸ்ரறில் விளையாடுவதற்காக ஒப்பந்தமிடப்பட்டார். பின்பு யூரோ 2004ல் முதன் முதலாக போர்த்துகீச அணிக்காக விளையாடுவதற்குக் களமிறக்கப்பட்டார்.போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் 15.09.2013 அன்று தொடர்ந்து “எசுப்பானியா” நாட்டின் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் கிளப்பின் தலைவர் புளோரின்டினா பெரெஸ்சும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இதன் மூலம் இவருக்கு ஆண்டுக்கு 143 கோடிகள் வருமானம் கிடைத்தது.ரொனால்டோவிற்கு புகை மற்றும் குடிப்பழக்கங்கள் கிடையாது, காரணம் இவரது தந்தை இந்த காரணங்களால் இறந்ததாலே ரொனால்டோ இந்த பழக்கங்களை வெறுக்கின்றார். மற்றும் இவர் தனது உடலில் எவ்வித டேட்டுகளும் பச்சை குத்துதல் இட்டுக் கொள்ள மாட்டார், காரணம் இவர் ஆண்டுக்கு ஒருமுறை தனது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் இரத்த தானம் செய்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்.