தூத்துக்குடியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, ஆயிரம் பிறை பூங்காவில் அமைந்துள்ள தொழிலாளர் சிலைக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொழிலாளர்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று தூத்துக்குடி ஆயிரம் பிறை பூங்காவில் உள்ள தொழிலாளர் சிலைக்கு மேயர் மலர் தூவி தனது மரியாதையைச் செலுத்தினார்.
இந்நிகழ்வில் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளர் தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி மற்றும் அந்தோணி மார்ஷலின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


