காயல்பட்டினத்தில் குடியிருப்பு பகுதியில் ஜியோ டவர் அமைக்க கூடாது என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் குளம் சாகிப் தம்பி தோட்டம் பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “காயல்பட்டினம் குளம் சாகிப்தம்பி தோட்டம் பல தெருக்களில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தற்சமயம் எங்கள் வீடுகளுக்கு மத்தியில் ஒரு ஜியோடவர் அமைக்கப்பட்டு வருகிறது. எங்கள் பகுதியில் அடிக்கடி பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே நாங்கள் இந்த டவர் அமைப்பதை எதிர்க்கிறோம் தங்கள் சமூகம் எங்களிடம் கருணைகாட்டி இந்த டவர் அமைப்பதை நிறுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


