
டீசல் விலை உயர்வை கண்டித்து ஏரல் பகுதியில் செங்கல் சூளைக்கு வாடகைக்கு செல்லும் 40 மினி லாரிகள், 2 வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல், புதுமனை, வாழவல்லான், ஆலடியூர், அதிசயபுரம் உள்பட பல பகுதிகளில் ஏராளமான செங்கல்சூளை மற்றும் சேம்பர்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். டீசல், பெட்ரோல் உயர்வை கண்டித்து செங்கல்சூளை மற்றும் சேம்பருக்கு செங்கல் ஏற்றி செல்லும் வாடகை மினி லாரிகள் நேற்றும் இன்றும் இயங்கவில்லை. சுமார் 40க்கும் மேற்பட்ட மினி லாரிகள் இயங்காததால் வீடுகட்ட செங்கல் ஏற்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஓட்டுநர்களின் நலன் கருதி மத்திய மாநில அரசுகள் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.