
வல்ல நாடு அருகே நாணல் காட்டில் கோரோனா நோய்தீர இடைக்காடர் மற்றும் ஆமை தீபத்துக்கு 41 நாள் சிறப்பு யாக பூஜை நடைபெறுகிறது.
தென் நள்ளாறு எனப் போற்றப்படுவது நாணல் காடு திருகண்டீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் கும்பாபிசேகம் கண்டு பல நாள்களாகி விட்டது. இந்த ஆலயத்தில் கும்பாபிசேகம் நடைபெற பல்வேறு பணிகளை ஊர்மக்கள் மற்றும் திருப்பணி கமிட்டியினர் செய்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த சிவனை இடைக்காடர் சித்தர் வணங்கினார் என்ற ஐதீகமும் உண்டு.
இதற்கிடையில் பச்சை வேஷ்டி சாமி சடையாண்டி சித்தர் என்பவர் கடந்த மாதம் தாமிரபரணி ஆற்றங்கரையில் இடைக்காடர் சித்தரைப் பிரதிஷ்டை செய்து, எதிரில் ஆமை உருவத்தின் மீது தீபம் போட்டால் , சிவன் கோயில் கும்பாபிசேக பணி நடைபெற்று, தீராத தொற்று நோயான கோரேனா நோய் தீரும் என ஆவல் கொண்டார். இதற்காக நாணல் காடு பஞ்சாயத்துத் தலைவர் இசக்கி முத்து மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனை செய்தார். அதன் படி கடந்த 29.06.2020 அன்று சிலை பிரதிஷ்டை மற்றும் தீப பிரதிஷ்டை நடந்தது.
இதற்கிடையில் உலகம் கொரோனா நோய் பிடியில் சிக்கி தவிக்கிறது. இதைக் காப்பாற்ற வேண்டும் என்றால் தொடர்ந்து 41 நாள் மண்டல பூஜையும் கொரோனா நோய் பிடியிலிருந்த காப்பாற்ற வேண்டிச் சிறப்பு யாகமும் நடைபெறுகிறது.
இதுகுறித்து பச்சை வேஷ்டி சாமி சடையாண்டி சித்தர் கூறும் போது, தாமிரபரணி ஆற்றங்கரையில் பட்டுப் போன அரசமரத்தடியில் இயற்கனவே இடைக்காடர் சித்தர் பீடம் இருந்துள்ளது . அது நாளடைவில் மங்கிப் போய் விட்டது. தற்போது இந்த மரம் துளிர் விட்டுள்ளது. சில குறிப்புகளின் படி இந்த இடத்தில் இடைக்காடர் சித்தர் பிரதிஷ்டை செய்து. ஆமை விளக்குப் போட்டால் இந்த கோயிலுக்குக் கும்பாபிசேகம் நடைபெறும். கொரேனா நோய் தீர விளக்குப் பூஜைதான் சிறப்பானது எனவே தான் இந்த ஆமை விளக்கு ஏற்றிவைத்துள்ளோம். விரைவில் நோய் தீர ஈசன் அருள் புரிவான் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அனுமன் பக்தர் கேபி மாறன், நாணல் காடு பஞ்சாயத்துத் தலைவர் இசக்கி முத்து உள்படப் பலர் கலந்துகொண்டனர்.
—-