
செய்துங்கநல்லூரில் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில் வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 யை எதிர்த்து ஒரு கோடி கையெழுத்து இயக்கம், 5000 தெருமுனைக் கூட்டங்களை ஜூலை 25 முதல் 30 வரை நடத்தி வந்தது. அதன் பின் தற்போது மாவட்டம் முழுவதும் இது குறித்து ஆர்ப்பாட்டம் நடந்தது வந்தது.
செய்துங்கநல்லூர் பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் பேச்சிமுத்து, மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணி, கண்ணன், கொம்பையா, ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய கல்வி வரைவு 2019 யை கண்டித்தும், அதை மாற்றக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.