
மணிமுத்தாறு மூன்றாவது ரீச்சில் மிக முக்கிய குளம் தெற்குகாரசேரி குளம். கோரம் பள்ளம் ஆறு வடிநில வட்டம் பாரமரிப்பில் இருக்கும் இந்த குளத்தில் தண்ணீர் நிறைந்தால் ஒரு போகம் கவலையில்லாமல் விளைச்சல் செய்யலாம். அதோடு மட்டுமல்லாமல் இங்குள்ள அனைத்து கிணறுகளும் நிரம்பி, தொடர்ந்து விவசாயிகள் சந்தோஷமாக மறு போகத்துக்கும் தயாராகலாம். தற்போது இந்த தெற்கு காரசேரி குளம் நிறைந்து மறுகால் பாய்கிறது. இதைக் காணும் போதே விவசாயிகளுக்கு மிக மகிழ்ச்சி. நன்றி வருண பகவானே என மழையை வணங்கி வருகிறார்கள்.