ஸ்ரீவைகுண்டம் தாலூகா கலியாவூர் பெரியகுளம் மிகவும் விசேஷமான குளமாகும். நெல்லை மாவட்டத்தில் இருந்து வரும் காட்டாற்று தண்ணீர் அனைத்தும் சீவலப்பேரிக்கும் மருகால் தலைக்கும் இடையே சாலையை கடந்து தாமிரபரணி ஆற்றுக்குள் வருகிறது. தண்ணீர் வேகம் அதிகரித்து வருவதால் இந்த பகுதியில் வாகனங்கள் வரஇயலாமல் தடைப்பட்டுவிட்டது. இதனால் கலியாவூர் உள்பட சுற்று பகுதியில் உள்ள மக்கள் திருநெல்வேலிக்கு வர வல்லநாடு சுற்றித்தான் வரவேண்டியது உள்ளது. கலியாவூர் குளம் நிரம்பி இருப்பதால், அது உடையாமல் இருக்க கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


