
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கருத்தப்பாண்டி(17). இவர் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீகுமர குருபரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கருத்தப்பாண்டி தற்போது வெள்ளூரில் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். மதியம் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது திடிரென மயங்கி விழுந்தார். தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம் மற்றும் சக மாணவர்கள் கருத்தப்பாண்டியை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவன் இறந்த சம்பவம் சக மாணவர்களிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.