
ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி இன்று (15.02.2018) தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் அறிவித்திருந்தனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட அனுமதி அளிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 25ம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் மாநில அளவிலான ஜல்லிக்கட்டு நடத்திடும் வகையில் ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் அதற்கான ஆயத்தப்பணிகளை கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கினர்.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணை வெளியிடக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து ஏறு தழுவுதல் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட புதிதாக அரசாணை வெளியிட்டது போல் தூத்துக்குடி மாவட்டத்தை ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக அறிவித்து ஸ்ரீவைகுண்டத்தில் போட்டி நடத்திட அனுமதிக்க வலியுறுத்தி வருகின்ற 15ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானிக்கபட்டது.
பின்னர் ஸ்ரீவைகுண்டம் துணை போலிஸ் சூப்பிரண்டிடம் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்கும்படி போராட்டக்குழுவினர் மனு அளித்தனர்.
சம்பந்தமாக நேற்று மாலை ஶ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலமையில், திருவைகுண்டம் துணைக் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சமாதான ௯ட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பண்டைய காலத்தில் ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நடைபெற்றதற்கான ஆதரங்கள் எடுத்துரைக்கப்பட்டது. இது குறித்து அரசுத்துறை சார்பில் கள ஆய்வு செய்து ஜல்லிக்கட்டு விழா நடத்திட அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
ஜல்லிக்கட்டு விழா நடத்திட அனுமதி பெறுவதற்கு சிறிது கால தாமதம் ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளதால் வருகிற 25-02-2018 நடப்பதாக அறிவிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விழா அரசிதழில் வெளியிட்டபின் அதனடிப்படையில் மறு தேதி நிர்ணயம் செய்யப்பட்டு விழா நடத்திட முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று 15.02.2018 அன்று நடைபெற இ௫ந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.